×

மினி மாரத்தான் ஓட்டம்

உசிலம்பட்டி, அக். 18:  உசிலம்பட்டியில் தமிழக காவல்துறையில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் மினி மாரத்தான் ஓட்டம் நடத்தினர். ஐந்து கல்ராந்தல் தேவர்சிலை அருகே உசிலம்பட்டி டி.எஸ்.பி, கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் ஜோதிராஜன், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த மினி மாரத்தான் ஓட்டம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கீழப்புதூர், கொங்கபட்டி, வழியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, முத்துராமலிங்கம், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...