குஜிலியம்பாறை, அக். 18:குஜிலியம்பாறையில் நள்ளிரவில் மெடிக்கல் ஷாப் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ரூ.500ஐ திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜிலியம்பாறையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (49). இவருக்கு சொந்தமாக மெயின் ரோட்டில் மெடிக்கல் ஷாப் உள்ளது. மெடிக்கல் ஷாப்பின் ஒரு பகுதி ஆஸ்பெஸ்டாஸ் சீட்டாகவும், மற்றொரு பகுதி காங்கிரீட் கட்டிடமாகவும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு பணத்தை வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறந்தபோது ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.