குஜிலியம்பாறையில் நள்ளிரவில் துணிகரம் மெடிக்கல் ஷாப்பை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

குஜிலியம்பாறை, அக். 18:குஜிலியம்பாறையில் நள்ளிரவில் மெடிக்கல் ஷாப் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ரூ.500ஐ திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜிலியம்பாறையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (49). இவருக்கு சொந்தமாக மெயின் ரோட்டில் மெடிக்கல் ஷாப் உள்ளது. மெடிக்கல் ஷாப்பின் ஒரு பகுதி ஆஸ்பெஸ்டாஸ் சீட்டாகவும், மற்றொரு பகுதி காங்கிரீட் கட்டிடமாகவும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு பணத்தை வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறந்தபோது ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கல்லாவை பார்த்தபோது அதிலிருந்த ரூ.500யை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கல்லாவை கழட்டி பணம் எவ்வளவு உள்ளது என்பதை பார்த்துள்ளனர். அப்போது அதிலிருந்த 10 ரூபாய் நாணயங்கள் ரூ.300க்கு இருந்துள்ளது. அதை திருடிச் செல்லாமல் விட்டுச் சென்றனர். குஜிலியம்பாறையில் நள்ளிரவு நேரத்தில் கடையின் ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: