செம்பட்டி, அக். 18:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மணலூர், தடியன்குடிசை, ஆடலூர், பன்றிமலை மலைப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மயில்கள் உள்ளன. தற்போது மலைப் பகுதிகளில் மயில்களுக்கான இரை இல்லாததால், மயில்கள் கூட்டம், கூட்டமாக அய்யம்பாளையம் மருதாநதி, சித்தரேவு, பட்டிவீரன்பட்டி, ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க பகுதிக்கு வருகின்றன.
தற்போது மயில்கள் கூட்டம், கூட்டமாக மலைப் பகுதிகளில் இருந்து தரைப் பகுதிக்கு வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக சித்தரேவு, நெல்லூர், அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் முகாமிட்டுள்ளனர்.