பழநி, ஆக. 18:பழநி பகுதியில் மீண்டும் மர்மக் காய்ச்சல் பரவுவது அதிகரித்திருப்பதால் சுகாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பழநி மற்றும் அதன் சுற்றுப்பு கிராமங்களில் கடந்த வருடம் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகளவு பரவி இருந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. சுகாதாரப்பணி, கொசு ஒழிப்பு, சாக்கடை தூர்வாருதல் போன்றவற்றால் காய்ச்சல் பரவாமல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழநி அருகே வில்வாதம்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த மணிகண்டன் என்பவர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.