×

31ம்தேதி தலைமை செயலகம் முற்றுகை

குளச்சல், அக்.18: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஊழியர் கூட்டம் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் குளச்சலில் நடந்தது. ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்ட தலைவர் சுசீலா, மாநில செயற்குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா, நிர்வாகிகள் மணவை கண்ணன், கணபதி, சுமதி, கார்மல், ஐயப்பன், ஆக்னஸ், ஞானசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊழல் முறைகேடுகளை கண்டித்து வரும் 31ம்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவது, திக்குறிச்சி மகாதேவர் கோயில் கொள்ளையர்களை கண்டுபிடித்து சிலைகளை விரைவாக மீட்கவும், ரப்பர் வாரிய ஊழலில் கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது, பேயன்குழி முதல் காரங்காடு, குருந்தன்கோடு வரை குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட கேட்பது, வரும் 27ம் தேதி கும்பகோணத்தில் நடக்கும் அகில இந்திய விவசாயிகள் மாநாட்டில் குமரி மாவட்டத்திலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : siege ,Chief Secretariat ,
× RELATED 23ம் தேதி அரசியல் கட்சி தலைவர்களுடன்...