×

கார் டிரைவருக்கு 11 ஆண்டு சிறை

மார்த்தாண்டம், அக். 18: குலசேகரம் புறாநேரிவிளை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.  வண்டிப்பிலாங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் மணி மகன் விஜயகுமார் (32). கார் டிரைவர். இவர், கடந்த 2016ல் சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி காரில் ஏற்றி தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.வீட்டில் வைத்து சிறுமிக்கு டிவியில் ஆபாச படங்களை காண்பித்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.இதன் பேரில், போலீசார் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விசாரணையில், சிறுமி 8ம் வகுப்பு படிக்கும் போதே பல முறை தனியாக அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை குமரி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கில் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் மீனாட்சி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோஷம் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதன் படி, விஜயகுமாருக்கு 11 ஆண்டு ஜெயில்தண்டனையும், ₹30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து விஜயகுமார் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : jail ,car driver ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!