×

கருங்கல் அருகே விஷம் குடித்த தொழிலாளி சாவு

கருங்கல் அக்.18:  கருங்கல் அருகே விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டத்தை சேர்ந்தவர் சேம்ராஜ் (52). தொழிலாளி. இவரது மனைவி வசந்தகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி சேம்ராஜ் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை சேம்ராஜ் இறந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : death ,laborer ,plant ,
× RELATED தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி...