×

அதிமுக 47ம் ஆண்டு தொடக்க விழா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

நாகர்கோவில், அக்.18 :  அதிமுக தொடங்கப்பட்டு 47ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், அதன் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அதன் அருகில் உள்ள ெஜயலலிதா மணல் சிற்பத்துக்கும் மலர் தூவி வணங்கினர். இந்த நிகழ்ச்சியில்  அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார், இளைஞர் பாசறை செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் பொன் சுந்தரநாத், வக்கீல் சுந்தரம், சந்துரு, சுகுமாரன், ரபீக், இ.என். சங்கர், கார்மல் நகர் தனிஸ், ரயிலடி மாதவன், வக்கீல் ெஜயகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு  இனிப்பும் வழங்கினர்.

Tags : AIADMK ,celebration ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...