×

பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு

கன்னியாகுமரி, அக். 18: சாமிதோப்பை அடுத்த சோட்டப்பணிக்கன் தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்  (38). மார்பிள் தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி  (34). நேற்று மதியம் வீட்டின் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஜெயலட்சுமியின் அருகில் சென்று கழுத்தில் ஒங்கி அறைந்துள்ளார்.இதில், நிலைகுலைந்த ஜெயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுள்ளார். ஜெயலட்சுமி கூச்சலிட்ட சப்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் பைக்குகளில் சென்று மர்மநபரை ேதடினர். ஆனால் எந்த விபரமும் கிடைக்கவில்லை.
சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கோயிலில்  பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதில், கொள்ளையன் உருவம் தெளிவாக பதிவாகியிருந்தது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : pound chain ,
× RELATED நகை பறித்துவிட்டு மூதாட்டியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய மர்ம நபர்