ரிஷிவந்தியம், அக். 17: திருக்கோவிலூர் அடுத்த மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் சந்திரசேகர்(34), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாலை இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான மணிகண்டன், சுரேஷ் ஆகியோருடன் மேல்வாலை பெரிய ஏரியில் குளிக்க சென்றார். ஏரியில் குளித்து கொண்டிருக்கும்போது சந்திரசேகர் மட்டும் நீரில் மூழ்கி அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதையடுத்து நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் உறவினர்கள், கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சந்திரசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை அவரை சடலமாக மீட்டனர்.