விழுப்புரம், அக். 17: தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ், கருணை தொகை வழங்கிட வேண்டும். நிலையாணைகள் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். பணிவரன் முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது பணியிட மாறுதல், இளநிலை உதவியாளர் தேர்வில் டாஸ்மாக் இயக்குநர் குழு முடிவுகளை அமல்படுத்த வேண்டும்.