‘விக்கிரவாண்டி, அக். 17: விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு பிரிவை நேற்று பொன்முடி எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பொன்முடி எம்எல்ஏ கூறுகையில், காய்ச்சல் பிரிவில் 35க்கும் மேற்பட்டோர் ஜூரம் என்ற காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நிரப்பப்பட வேண்டிய இடங்கள் நிறைய உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது.