திண்டிவனத்தில் குடிநீர் விற்பனை நிலையம் மீண்டும் திறப்பு

திண்டிவனம், அக். 17: திண்டிவனத்தில், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே இருந்த குடிநீர் விற்பனை நிலையம் மூடியே இருந்தது. பயணிகளின் நலன் கருதி குடிநீர் விற்பனை நிலையத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக மூடப்பட்டு இருந்த குடிநீர் விற்பனை நிலையம் மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பயணிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: