விநாயகர் சிலை ஏரிக்கரையில் கண்டெடுப்பு

திருவெண்ணெய்நல்லூர், அக். 17: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருடு போன பழமை வாய்ந்த விநாயகர் சிலை ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராயநல்லூர் கிராமத்தில் சக்தி விநாயகர், பாலமுருகன் சமேத செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி இரவு கோயிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டது. இது குறித்து கோயிலின் முக்கிய நிர்வாகிகள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சிலை நேற்று காலை அதே ஊரில் உள்ள ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிலைக்கு பூஜை செய்து எடுத்து சென்று கோயிலில் வைத்தனர்.

Related Stories: