சாராயம் விற்றவர் கைது

விக்கிரவாண்டி, அக். 17:விக்கிரவாண்டியில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பொன்னங்குப்பம் பகுதியில் சம்பவத்தன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூண்டி செல்லும் சாலையில் சாராயம் விற்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் பொன்னங்குப்பத்தை சேர்ந்த மோகன்(40) என தெரிந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: