மணல் ஏற்றிவந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ரிஷிவந்தியம், அக். 17: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் பகுதியில் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் மூர்த்தி, துள்ளி மகன் நாராயணன், காக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிங்காரம் ஆகிய 3 பேரும் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, மணலுடன் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: