புதுச்சேரி, அக். 17: புதுவை, உருளையன்பேட்ைட, அய்யனார் நகரில் வசித்தவர் கிருஷ்ணன் (58). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டாம். சமீபகாலமாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த கிருஷ்ணன் அதற்கு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அங்குள்ள பாத்ரூம் சிமெண்ட் சீட் கூரை இரும்பு கம்பியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணனுக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.