×

ஏரியில் தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

புதுச்சேரி, அக். 17: புதுவை ஏம்பலம் வெற்றிவேல் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது ஒரே மகன் செல்வகுமார் (28). பெற்றோர் அதிகம் செல்லம் கொடுத்ததால், வேலைக்கு செல்லாமல் மது குடித்து செலவழித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியதில், வண்ணான் ஏரியில் செல்வகுமார் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குடிபோதையில் ஏரியில் இறங்கி, கால் கழுவ சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lake ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...