×

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம், அக். 17: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிப்பட்டு வீரன்கோயில் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த விருத்தாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்த முருகன்(54) என்பவரை பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்த 14குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதுபோல் தொட்டிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொட்டிக்குப்பம் மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதையடுத்து மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களான தொட்டிக்குப்பத்தை சேர்ந்த  ராஜா(26), முருகானந்தம்(23) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு அபராத தொகை விதிக்க விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags : soldier ,
× RELATED ராணுவ வீரர் மாயம்