×

கடற்கரையில் விஷம் குடித்து அரசு ஊழியர் தற்கொலை

புவனகிரி, அக். 17:  புதுச்சத்திரம் அருகே உள்ள மடவாப்பள்ளம் கடற்கரையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கடற்கரையோரம் கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த அடையாள அட்டையின்படி, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சேடப்பாளையத்தை அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்(57) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய பொறியாளராக பணியாற்றியதும், தற்போது உடல்நலக் குறைவால் விடுப்பில் உள்ளதும் தெரிய வந்தது. வீட்டிலிருந்து கடற்கரைக்கு வந்த ராஜகோபால், மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : beach ,
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை