×

நான்கு சக்கர வாகனங்களுக்கு பிரதிபலிப்பான் பொருத்தம்

காட்டுமன்னார்கோவில், அக். 17:  காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன விபத்துகளும் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நடைபெறும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களும் நடக்கிறது. இந்நிலையில் முக்கிய கிராமப்புற சாலைகளில் காவல்துறை சார்பில் தற்காலிக தடுப்புகள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விபத்தை தடுக்கும் வகையில், காட்டு மன்னார்கோவில் பேருந்து நிலையம், காவல்நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக செல்லும், அனைத்து இரண்டு சக்கர வாகனம், நான்குசக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகளுக்கு பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டன.

Tags : wheelers ,
× RELATED வத்தலக்குண்டுவில் அச்சுறுத்தும் தெருநாய்கள்