×

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

சங்கராபுரம், அக். 17: சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி கிராமத்தில், முஸ்குந்தா ஆற்றின் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. டிரைவரை பிடித்து விசாரனை நடத்தியதில், திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தது தெரிந்தது.
 
இது குறித்து விசாரணை நடத்தியதில், வடபொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ஷேக்பாஷா மகன் ஜாபர்(32) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்ததும், வண்டியின் உரிமையாளர் அதே கிராமத்தை சேர்ந்த சர்புதீன் மகன் பாருக்(36) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி