×

மகள் சாவில் சந்தேகம்

பண்ருட்டி, அக். 17:  பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது மனைவி இந்திராணி (25). இருவருக்கும் திருமணம் நடந்து 8 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் தனது ஊதியத்தை வங்கி கணக்கு மூலம் மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். அவ்வப்போது இதற்கான கணக்கு வழக்குகளையும் கேட்பதுண்டு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிநாட்டில் இருந்து தனது சொந்த ஊர் திரும்பிய ராஜா, தனது மனைவியிடம் குழந்தைகள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் தான் அனுப்பிய பணம் சம்பந்தமாக கணக்கு வழக்குகளை கேட்ட போது அவர் சரியான பதிலை அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் வேதனையடைந்த ராஜா மதுபானம் அருந்திவிட்டு மனைவி இந்திராணியை சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட இந்திராணி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கி இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்திராணியின் தாய் லட்சுமி காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்