×

அண்ணாமலை பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம், அக். 17:  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்-INFITT) இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மொழியியல் புல முதல்வர் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் திருவள்ளுவன், பதிவாளர் (பொ) பேராசிரியர் முனைவர் ஆறுமுகம், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்ற (உத்தமம்-INFITT) தலைவர் முனைவர் அப்பாசாமி முருகையன், நியூஜெர்சி, அமெரிக்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஆராய்ச்சிகளில் சிறப்பு கவனம் செலுத்திட அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் (உத்தமம்-INFITT) ஆராய்ச்சி மற்றும் கல்வி நிகழ்வுகளை பரிமாறிக்கொள்ளவும், கற்பித்தல், கற்றலுக்கு தேவையான சாதனங்களையும் மற்றும் இலக்கியம் சம்பந்தமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகழ்வுகளை பரிமாறிக்கொள்ளவும், குறுகிய கால தொடர் கல்வி படிப்புகளை நடத்திடவும், கருத்தரங்கு, மாநாடு மற்றும் பயிலரங்குகளை இணைந்து நடத்திடவும், மாணவர்களை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிகழ்வுகளில் ஈடுபடுத்திட கூட்டாக இணைந்து செயலாற்றவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படுகிறது.

Tags : Annamalai University ,
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!