×

வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம், அக். 17: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரி திடீர் குப்பத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் குடியிருந்து வந்தனர். அப்போது நடைபெற்ற நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டு இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில்  7 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்காமல் வருவாய் துறையினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர்.இதுகுறித்து அவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாக அவர்களுக்கு பட்டா வழங்குவதாக திட்டக்குடி வருவாய் துறை நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் அவர்கள் வாக்குறுதி அளித்து பல நாட்கள் ஆகியும் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பெண்ணாடம் வருவாய்  ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த பெண்ணாடம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்

Tags : Siege ,Revenue Inspectorate ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...