கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சேலம், அக்.17: கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சேலம் பெரியபுதூர் சத்யா நகரை சேர்ந்தவர் குமார் (45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவருக்கும் இடையே கோயில் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.  2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி வெங்கடேஷ், குமாரை கத்தியால் குத்தி, கல்லால் தாக்கினார்.

இதில் குமாருடைய ஒரு கண் பார்வை பறிபோனது. இதுகுறித்து பேர்லாண்ட்ஸ் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், வாலிபர் வெங்கடேஷ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹ 3000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Related Stories: