காதலனுடன் சேர்த்து வைக்க கோரி பட்டதாரி பெண் போலீசில் தஞ்சம்

சேலம், அக். 17: காதலனுடன் சேர்த்து வைக்க கோரி சேலம் டிஐஜி அலுவலகத்தில் பட்டதாரி பெண் தஞ்சமடைந்தார். ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், நேற்று சேலம் சரக டிஐஜி அலுவலத்திற்கு வந்தார். பின்னர், காதலனோடு சேர்த்து வைக்க வலியுறுத்தியும், பாதுகாப்பு கேட்டும் மனு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பட்டதாரியான நானும், மோட்டூர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் படித்து வரும் ஒருவரை, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதுகுறித்த அறிந்த பெற்றோர் என்னை உறவினருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

ஆனால், காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தேன். என்னை வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது, தாலியை கழற்றி வீசி விட்டு, அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன். எனவே, என்னை காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: