சேலம், அக். 17: காதலனுடன் சேர்த்து வைக்க கோரி சேலம் டிஐஜி அலுவலகத்தில் பட்டதாரி பெண் தஞ்சமடைந்தார். ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், நேற்று சேலம் சரக டிஐஜி அலுவலத்திற்கு வந்தார். பின்னர், காதலனோடு சேர்த்து வைக்க வலியுறுத்தியும், பாதுகாப்பு கேட்டும் மனு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பட்டதாரியான நானும், மோட்டூர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் படித்து வரும் ஒருவரை, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதுகுறித்த அறிந்த பெற்றோர் என்னை உறவினருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.