×

தமிழகம் முழுவதும் 39 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சேலம், அக். 17:  தமிழகம் முழுவதும் 39 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் பணியாற்றி வந்த லதா, அரியலூரில் பணியாற்றிய வந்த புஷ்பராணி ஆகியோர் சேலம் மாநகருக்கும், தூத்துக்குடியில் பணியாற்றி வந்த கணேஷ்குமார், சென்னையில் பணியாற்றி வந்த ரஞ்சித், அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த கோமதி, கடலூரில் பணியாற்றிய ஆரோக்கியஜான்சி, கோவை மாவட்டத்தில் பணியாற்றிய தனலட்சுமி, திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சந்திரலேகா,

விழுப்புரம் மாவட்டம் கடும் குற்றப்பிரிவில் பணியாற்றிய மகாலட்சுமி, கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் பணியாற்றிய கவிதா ஆகியோர் மேற்கு மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு ரயில்வே பிரிவில் பணியாற்றிய சங்கீதா, தேனி மாவட்டத்தில் பணியாற்றிய ஆனந்த் ஆகியோர் கோவை மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி ராஜேந்திரன் பிறப்பித்தார். 

Tags : inspectors ,Tamil Nadu ,
× RELATED நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 174 பதற்றமான வாக்குசாவடிகள்