×

கூட்டாத்துப்பட்டியில் அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் திமுகவில் இணைந்தனர்

வாழப்பாடி. அக்.17: வாழப்பாடி அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் திமுகவில் இனைந்தனர். வாழப்பாடி அருகே கூட்டாத்துப்பட்டியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைத்தலைவர் மாதேஸ்வரன் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி அயோத்தியாப்பட்டிணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் ராயப்பன் வெங்கட்ராசு, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராஜன்முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி,முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மணி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் தங்கவேல், திமுக ஊராட்சி கழக செயலாளர் நாகராஜன், ஜம்பு, இன்ஜினியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்