×

தேசிய கராத்தே போட்டியில் ஓசூர் மாணவர் சாதனை

ஓசூர், அக்.17: தேசிய அளவிலான கராத்தே போட்டியில், ஓசூர் மாணவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை ஜெ.ஜெ உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவில் கோபுகானஷிடோரியு 17ம் ஆண்டு போட்டி அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஓசூர் தனியார் பள்ளி மாணவர் ஜெயசுகின், கட்டா கராத்தே பிரிவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். தேசிய அளவில் வெண்கலம் வென்ற மாணவரை, பயிற்சியாளர் கராத்தே மோகன்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.

Tags : Hosur ,karate competition ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...