தேன்கனிக்கோட்டை, அக்.17: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மாதிரி பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தளி தன்னார்வலர் குழு சார்பில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஆசிரியர் சீனிவாசன், தன்னார்வலர்கள் கிரண்குமார், மூர்த்தி, புருஷோத்தமன், ரமேஷ், உமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரகன்றுகளை வழங்கினர். காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடுதல் மற்றும் அறிவுத் திறன் மேம்படுத்தல் போட்டி (ஓவியப் போட்டி,
கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி) நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ராமசாமி வரவேற்றார். தலைமைஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் முருகன், கணேசன், சிவபிரசாத், சின்னசாமி, செல்லப்பா, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.