×

வேப்பனஹள்ளியில் இடி தாக்கி பசுமாடு பலி

வேப்பனஹள்ளி, அக்.17: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வேப்பனஹள்ளி-நாடுவனப்பள்ளி சாலையில் பர்வதம்மா என்பவருடைய வீட்டு தொழுவத்தில் பசுமாடு ஒன்று கட்டப்பட்டிருந்தது. அப்போது திடீரென இடி தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் அறிந்து அக்கம், பக்கத்தில் உள்ள விவசாயிகள் திரண்டு வந்தனர். ₹50 ஆயிரம் மதிப்புடைய மாடு இறந்ததை பார்த்து பார்வதம்மா கதறி அழுதார். தொடர்ந்து அங்குள்ள தோட்டத்திலேயே மாடு புதைக்கப்பட்டது.

Tags : Wampanahalli ,
× RELATED 494 மதிப்பெண் பெற்ற மலை கிராம மாணவி