×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்,அக்.17: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 728 கன அடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடகாவில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவலப்பள்ளி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 728 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் போதியளவு நீர் இருப்பதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 44.28 அடி உயரம் கொண்ட அணையில், தற்போது 42.15 அடியளவில் நீர்இருப்பு உள்ளது.

இதனால், கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி அக்ரஹாரம், மோரனப்பள்ளி, பாத்தகோட்டா, ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகாவில் மழை தொடர்ந்தாலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags : dam ,Kelavarapalli ,
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...