×

56 மாணவர்களுக்கு நூலக சந்தா செலுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்

கீழக்கரை, அக்.17: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கடலாடி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சேவியர் கலந்து கொண்டார். ஏர்வாடி நூலகர் பாலசோமநாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்
றார்.  விழாவில் கலாம் போல் மாணவர்களும் தங்களின் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் பொருட்டு ஆசிரியர் செந்தில்நாதன் தனது பணத்தில் ஏர்வாடி கிளை நூலகத்தில் 56 மாணவர்களை நூலக உறுப்பினர்களாக சேர்த்தார். இவர் ஸ்மார்ட் பள்ளியறை உருவாக்கி கலெக்டரிடம் பாராட்டு பெற்றவர்.  இவர் 56 மாணவர்களுக்கான உறுப்பினர் சந்தா தொகையான ரூ.1120ஐ பள்ளியின் தலைமை ஆசிரியை வாயிலாக நூலகரிடம் வழங்கினார். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags : Teacher ,government library ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...