×

அடுத்தடுத்து மூன்று வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை

திருப்புத்தூர், அக்.17: திருப்புத்தூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
திருப்புத்தூர் அருகே கூத்தகுடி கிராமத்தை சேர்ந்தவர் வன்னியன் மனைவி செல்வி(52). இவர் கடந்த 13ம் தேதி மானகிரியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த கிராமத்தினர் செல்விக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்துபார்த்த போது, பிரோவில் இருந்த நான்கரை பவுன் தங்க நகை மற்றும் 1500 ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதேபோன்று, அதே ஊரைச்சேர்நத மூர்த்தி மனைவி வள்ளி(75) என்பவருடைய வீட்டிலும் பூட்டை உடைத்து உள்ளே இருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம், ஒரு பட்டுப்புடவையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அருகிலுள்ள ராஜகோபால் மனைவி வசந்தா(60) என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து நுழைந்த மர்மநபர்கள், வீட்டில் ஒன்றும் இல்லை என்பதால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதுகுறித்து நாச்சியாபுரம் எஸ்.ஐ. சேகர்முனியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஒரே ஊரில் மூன்று வீடுகளின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்