×

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை மாநாடு

ராமநாதபுரம், அக்.17: ராமநாதபுரம் டிடியூசி ஜெய்ஹிந்த் ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க கிளை மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மணிபாராதி தலைமை வகித்தார். தலைவராக முருகன், துணைத் தலைவராக ஜோதி, செயலாளர் பிரபு, துணைச்செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக பாபு ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.கீழக்கரை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும், தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாகவும், திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரமாகவும், இயற்கை மரணத்திற்கு உதவித்தொகை ரூ.25 ஆயிரமாகவும், விபத்து இழப்பீடுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் நகர் செயலாளர் திருமுருகன் நன்றி கூறினார்

Tags : Auto Workers Union Convention ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை