வண்ண மயம் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக். 17: மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் மதுரை அண்ணா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 20 சதவீத போனஸ், 20 சதவீத கருணை தொகை வழங்க வேண்டும். மின்சார கட்டணம் முழுமையாக வழங்க வேண்டும். கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் மதுக்கூட உரிமையாளர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: