செம்பட்டி அருகே சிறு பாலத்தில் பெரிய ஓட்டை

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

செம்பட்டி, அக். 17: செம்பட்டி அருகே மதுரை மெயின்ரோட்டில் உள்ளது காமுபிள்ளைசமுத்தரம் கிராமம். இங்கு சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இவ்வூரின் நடுவே சின்னாளபட்டிக்கு சாலை செல்கிறது. இச்சாலையின் நடுவே உள்ள சிறுபாலம் சேதமடைந்து மெகாசைஸ் பள்ளமாக உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக இரவுநேரங்களில் விபத்து தொடர்கதையாகி வருகிறது. மேலும் இப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள், வயதானவர்கள் இப்பள்ளத்தில் அடிக்கடி தவறி விழுந்து காயமுறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைவில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: