கட்டபொம்மனுக்கு மலரஞ்சலி

திண்டுக்கல், அக். 17: சுதந்திர போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் ஆகியோரது பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் காமராஜர், சிவாஜி பேரவை சார்பில் நடைபெற்றது. தலைவர் பாண்டியன் தலைமை வகிக்க, பொதுச்செயலாளர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். வீரபாண்டிய கட்டபொம்மன் பிரிட்டிசாருக்கு எதிராக பெரும் முழக்கமிட்டவர் என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பொருளாளர் விசுவாசம் நன்றி கூறினார்.

Related Stories: