மதுரையில் ரவுடி கொலை நிலக்கோட்டை கோர்ட்டில் நான்கு பேர் சரண்

வத்தலக்குண்டு, அக். 17: மதுரையில் ரவுடி கொலை வழக்கு தொடர்பாக நிலக்கோட்டை ேகார்ட்டில் 4 பேர் சரணடைந்தனர.மதுரை செல்லூர் பாக்கியநாதபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் அசோக்குமார் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து அவரை அழைத்தது. அசோக்குமாரும் பெற்றோரிடம் தெரிந்தவர்கள் எனக்கூறி பேசிவிட்டு வருவதாக வெளியே சென்றார். சிறிதுநேரத்தில் அசோக்குமாரின் அலறல்சத்தம் கேட்டது. பெற்றோர் வெளியில் வந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் அசோக்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரில் செல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இக்கொலை தொடர்பாக மதுரை தத்தனேரியை சேர்ந்த செந்தமிழ்செல்வன் (24), விஜய் (23), கார்த்தி (24), சசிக்குமார் (24) ஆகிய 4 பேர் நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிபதி ரிஸ்வானாபர்வீன் 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Stories: