திண்டுக்கல், அக். 17: டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் கடைகளில் விற்பனைக்கு ஏற்ப பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிநிரந்தரம், பொது பணியிட மாறுதல், 40 சதவீத போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் அந்தந்த தலைநகர்களில் நடைபெற்று வருகிறது.அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் ராமு, கௌரவத் தலைவர் மகாமுனி தலைமை தாங்கினார்.