ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் வத்தலக்குண்டு, வாடிப்பட்டி, சோழவந்தான், கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் வாழைத்தார்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1 கிலோ வாழைக்காய் ரூ.18லிருந்து ரூ.20 வரை விற்பனையானது. தற்போது வரத்து அதிகரிப்பால் 1 கிலோ வாழைக்காய் ரூ.10 மட்டுமே விலை போகிறது. பண்டிகை நேரத்தில் வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.