சென்னை, அக். 17: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் வரதமாநதி அணையில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையில் இருந்து பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு 22.10.2018 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.