×

கூடுதல் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.16: திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பனியன்  தொழிலாளர்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்குவதோடு, அதை தீபாவளி பண்டிகைக்கு 10 தினங்களுக்கு முன்னர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபர் யூனியன் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜெகநாதன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, இசாக், சேகர் ஆகியோர் உரையற்றினர்கள். இதில் செந்தில்குமார், தண்டபாணி, ஆறுமுகம், ராஜாம்மாள், சசிகுமார், சுரேஷ், பஞ்சவர்ணம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா