மேட்டூர், அக்.16: சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் சதாசிவம். வக்கீலான இவர், தனது கட்சிக்காரர் ஒருவருக்காக கொளத்தூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மலர்விழி என்பவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 24.9.18ம் தேதி அனுப்பிய கடிதம் மறுநாள் 25.9.18ம் தேதி கதவு பூட்டப்பட்டிருப்பதாக கூறி திரும்பியுள்ளது. அதேபோல், 26.9.18ம் தேதியும் “டோர் லாக்டு” என போடப்பட்டு, 6.10.18ம் தேதி திரும்பி வந்துள்ளது. இதனை பார்த்து வக்கீல் சதாசிவம் அதிர்ச்சிக்குள்ளானார். 24 மணி நேரமும் காவல்நிலைய கதவுகள் பூட்டப்படக்கூடாது என்பது விதிமுறையாகும்.