சிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது

ஓமலூர், அக்.16:  தாரமங்கலம் அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார். தாரமங்கலம் அருகே சுட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 11ம் தேதி வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு திரும்பினார். அவரிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் கதிர்வேல்(23) என்பவர் ஆசைவார்த்தை கூறி தன்னை கடத்தி சென்றதாகவும், ஒரு பாழடைந்த வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்து விட்டு, வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்ததாகவும் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வாலிபர் கதிர்வேலை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: