தா.பேட்டை, அக்.16: முசிறியில் பாஜக சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் முசிறி சட்டமன்ற தொகுதி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முசிறி தொகுதி அமைப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுப்புகுரு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் மனோகரராஜன், கோட்ட இணைப் பொறுப்பாளர் கண்ணன், சிவசுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அப்போது பூத் கமிட்டி அமைத்தல், பூத் கமிட்டி உறுப்பினர்களின் பெயர், போன்நம்பர் அடங்கிய பட்டியலை தலைமையிடம் ஒப்படைப்பது, விவசாய கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், தலைவர்களை கட்சியில் இணைத்தல், இரண்டு அல்லது மூன்று மகளிர் சுயஉதவி குழுக்களுடன் தொடர்பில் இருத்தல், அவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது, அறிமுகமான அனைவரிடமும் செல்போனில் நமோஆப் பதிவிறக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி ஒன்றிய நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.