திருச்சி ஆயுதப்படையில் 21ம் தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சி, அக்.16: திருச்சி ஆயுதப்படையில் வருகிற 21ம்தேதி நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவல் துறையில் பணியாற்றி வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டும் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் நீத்தார் நினைவு நாள் வருகிற 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதில் மாநகரில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த சார்பு ஆய்வாளர் ராமநாதன், ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறையில் பணியாற்றி வீரமரணம் அடைந்த குணேந்திரன் ஆகியோரின் குடும்பத்தினர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் வீரமரணம் அடைந்தோரின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளனர். நீத்தார் நினைவு நாளில் வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு பெற்று மரியாதை செலுத்த வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: