திருவெறும்பூர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் முன்னாள் ராணுவவீரர் கைது

திருச்சி, அக். 16: திருவெறும்பூர் அருகே கருத்து வேறுபாட்டால் தனியாக வசிக்கும் கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தட்டிக்கேட்ட மனைவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் வி.எஸ் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது திருச்சி ஆவின் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (43). இருவருக்கும் திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். அருள்ராஜுக்கும், பாக்கியலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அருள்ராஜ் நவல்பட்டு போலீஸ்காலனி பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அருள்ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்ததால் பாக்கியலட்சுமி நேரில் சென்று கணவரிடம் கேட்டுள்ளார். அப்போது அருள்ராஜ், பாக்கியலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாக்கியலட்சுமி  திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்இன்ஸ்பெக்டர் ஜோதிலெட்சுமி வழக்குபதிவு செய்து அருள்ராஜை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

இந்நிலையில் அருள்ராஜ் தரப்பு வழக்கறிஞர் அருள்ராஜை சந்திக்க அனுமதி கேட்டும் கொடுக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவேரி சூப்பர் மார்க்கெட்டில் தீபாவளி தள்ளுபடி விற்பனை

திருச்சி, அக்.16: திருச்சி காவேரி சூப்பர் மார்க்கெட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொருட்களுக்கும் எம்ஆர்பி விலையிலிருந்து 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து காவேரி சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் முருகவேல் ரவிசங்கர் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்காக காவேரி சூப்பர் மார்க்கெட்டின் ஜங்ஷன், திருவெறும்பூர், உறையூர், கிராப்பட்டி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்து கிளைகளிலும் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. உணவு பொருட்கள் மற்றும் பலகாரங்களுக்கு பயன்படுத்தும் அனைத்து முன்னணி நிறுவனங்களின் நெய், எண்ணெய், குளோப்ஜாமுன் மிக்சர், தீபாவளி அன்பளிப்பு பொருட்கள் என்று அனைத்தும் 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

எங்கள் சூப்பர் மார்க்கெட்டில் அனைத்து பொருட்களும் சுத்தம், சுகாதாரமான முறையில் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொரு பிரிவு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வகையில் ஒவ்வொரு பொருளுக்கும் எம்ஆர்பி விலை, தள்ளுபடி விலை ஆகியவற்றை குறிப்பிட்டு விலை பட்டியலும் உள்ளது. மேலும் ரவா உருண்டை, முறுக்கு, அதிரசம், பாசிப்பருப்பு, உருண்டை ஆகியவற்றும் ரெடிமிக்ஸ்களும் விற்பனைக்கு உள்ளன. பண்டிகை காலத்தில் பரிசு பொருட்கள் வழங்கும் வகையில் டைட்டன், பாஸ்ட் டிராக் கைக்கடிகாரங்கள், விஐபி டிராலிபேக், பேன்சி கிப்ட், பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.  வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்துக்கும் சிரமம் இல்லாமல் பில்லிங் செய்ய சிறப்பு கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. உடனுக்குடன் டெலிவரி செய்யக்கூடிய வகையில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது.

Related Stories: