×

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எஸ்பி பேட்டி

திருத்துறைப்பூண்டி அக்.16: திருத்துறைப்பூண்டியில் எஸ்பி விக்கிரமன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளிக்கு முன்புறமுள்ள திருமண மண்டபம் அருகிலும், சாமியப்பா நகர் முள்ளியாற்றுபாலம் அருகிலும் மாணவிகள்பள்ளிக்கு வந்து போகும் நேரங்களில் கிண்டல் செய்வதாகவும், மேலும் பள்ளி வளாகத்தில் காலையில் பள்ளி வளாகத்தில் கால்நடைகளை கொண்டு வந்துவிட்டுவிட்டு மாலையில் வந்து ஓட்டி செல்கிறார்கள் என்று தலைமையாசிரியை தெரிவித்துள்ளார். மாணவிகளின் பாதுகாப்பைஉறுதி செய்யும் வகையில் பள்ளி தொடங்கும் நேரங்களிலும், முடியும் நேரங்களிலும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தின் அருகில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றநடவடிக்கை எடுக்கப்படும்  என எஸ்பி கூறினார்.

Tags : SBI ,booth ,Tirur ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...